பளை மருத்துவமனை வைத்திய அதிகாரி பயங்கரவாதக் குற்றச்சாட்டில் கைது!
பளை மருத்துவமனையில் கடைமையாற்றிய நீதித்துறை வைத்திய அதிகாரி (The Judicial Medical Officer (JMO)) பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவரென்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட சாவகச்சேரியைச் சேர்ந்த 41 வயதுள்ள சின்னையா சிவரூபன் என்ற மருத்துவ அதிகாரி பயங்கரவாத விசாரணைப் பிரிவிடம் கையளிக்கப்பட்டுள்ளார் என காவல்துறையின் பேச்சாளர் ருவான் குணசேகரா தெரிவித்தார்.